சூனியம் மற்றும் சோதிடம் குறித்த இஸ்லாமிய சட்ட விளக்கம்
சூனியம் மற்றும் சோதிடம் குறித்த இஸ்லாமிய சட்ட விளக்கம் அஷ்ஷெய்க்: அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) சூனியம் மற்றும் சோதிடம் குறித்த இஸ்லாமிய சட்ட விளக்கம் இப்புத்கத்தை வாசிப்பவரும், கேட்பவரும், கற்றுக்கொள்பவரும் இதன் மூலம் பயன்பெற வேண்டுமென அல்லாஹ்விடம் இறைஞ்சுவதுடன் எங்கள் அனைவருக்கும் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றி வாழவும் ஷைத்தானின் ஊசலாட்டங்கள் பிழையான முறைகள் அனைத்தையும் எம்மை பாதுகாக்குமாறும் அவனிடம் பிராரத்திக்கிறோம். அவனே இதற்கு உதவிசெய்பவனாகவும் வல்லமை படைத்தவனாகவும், நேரான பாதைக்கு வழிகாட்டுபவனாகவும் உள்ளான். மேலும் எங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடுபத்தார் மற்றும் அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவாதாக அப்துல்லாஹ் இப்னு அப்தில் முஹ்ஸின் அத்துர்கி இஸ்லாமிய விவகாரங்கள், அவ்காப், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் விழிப்பூட்டல் : நாம் குறிப்பிட்ட ஸஹீஹான ஹதீஸ்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள் யாவும்; ஜின்னுடன் நேரடியாக பேசுதல், அதற்கு உபதேசம் செய்தல், அதை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அது அதற்கான பதிலை கூறியமை போன்ற விடயங்கள் ஸுலைமான் அலைஹி ஸ்ஸலாம் அவர்கள் தொடர்பாக அல்லாஹ் கூறிய பின்வரும் கூற்றுடன் எவ்விதத்திலும் முரணாணதாக இல்லை என்பதை அறிவித்து நிற்கின்றன. அவரின் கூற்றை ஸுறது ஸாதில் அல்லாஹ் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான். "ஆகவே, அவர் "என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார். இவ்வாறுதான் அது (ஜின்னானது) நன்மையை ஏவி தீமையை தடுத
Loading comments…