தவ்ஹீதும் அதன் பிரிவுகளும்
தவ்ஹீதும் அதன் பிரிவுகளும் தொகுப்பு: யூ.கே. ஜமால் முஹம்மத் மீளாய்வு: முஹம்மத் அஸ்ஹர் முதல் பதிப்பு: 1430 - ஹி இந்நூல்... 'தவ்ஹீத்' எனும் ஏகத்துவக் கொள்கையிலும், மார்க் கத்தின் அடிப்படையான விடயங்களிலும், கண்டிப்பாக இருந்து, இறுதிவரை அக்கொள்கையில் அறுதியாகவும் உறுதியாகவும் இருந்து, அவ்வுண்மையான கொள்கை யிலேயே எம்மையும், சிறு வயது முதல் வளர்த்தெ டுத்த, எம் அன்புத் தந்தையும், ஓய்வுபெற்ற அதிபரு மான, மறைந்த எம்.ரி. உமர் கத்தாப் (றஹி) அவர் களுக்கு இந்நூலை நான் சமர்ப்பணம் செய்கிறேன். அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து, அவர்களின் கப்று வாழ்வை சுவர்க்கத்தின் பூஞ்சோ லையாக மாற்றி, மறுமையில் 'பிர்தவ்ஸ்' எனும், உயர்ந்த அவர்களை சுவர்க்கத்தில் நுழையச்செய்வானாக. ஆமீன். முன்னுரை பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே!, ஸலவாத் தும் ஸலாமும் அவனுடைய தூதர் மீதும், அவருடைய குடும்பத்தினர், தோழர்கள், மற்றும் ஏனைய நல்லடி யார்கள் மீதும் உண்டாவதாக. ஒருவன், முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொள் கிறான் என்றால், அவனிடம் குறிப்பிட்ட கொள்கைகள், கிரியைகள் அமைந்திருப்பது அவசியமாகும். அவனிடம் அமைந்திருக்க வேண்டிய கொள்கைகளும், கிரியைகளும், அல்குர்ஆன், ஹதீஸ்கள் குறிப்பிடும் அடிப்படையில் அமையவேண்டும். இல்லையேல் அவன், பெயரளவில் முஸ்லிமாகவும், இஸ்லாத் தொடர்பில்லாதவனாகவும் கணிக்கப்படுவான். குறிப்பாக அவன் கொண்டிருக்கும், 'அகீதா' என்று சொல்லப்படும் 'கொள்கை', இவ்வழியில் அமைய வில்லையென்றால், அவன் செய்யும் கிரியைகள் கூட, அங்கீகரிக்கப்படாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விடும். எதார்த்தத்தில் துடன் எனவே 'கொள்கை' மிகவும் பிரதானமானதும், அடிப் படையானதுமாகும். அதிலும் குறிப்பாக, அல்லாஹ் வைப் பற்றிய
Loading comments…